காஞ்சிபுரம், ஜன.29 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், காஞ்சிபுரம் 15 ஆவது வட்ட கிளைச் செயலாளர் பி.அரிபாஸ்கர் சனிக்கிழமையன்று (ஜன.29) மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 52. காஞ்சிபுரம் நகரப் பகுதி யில் குடிசைகளை அகற்றப் பட்டபோது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு போராடி மாற்று இடத்தை பெற்றுத் தந்தவர். அன்னாரது உடலுக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.சங்கர், செயற்குழு உறுப்பினர்கள் இ.முத்துக்குமார், கே.நேரு, டி.ஸ்ரீதர், ஆர்.சௌந்தரி, நிர்வாகிகள் சீனு, பரமானந்தன் உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அன்னாரது உடல் தாயாரம்மன் குளம் மின்மயனத்தில் தகனம் செய்யப்பட்டது.