districts

உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரம்,ஜூலை 13- காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-  தமிழக அரசின், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக் கான உதவித் தொகை திட்டத்தின்கீழ் 10 ஆம் வகுப்பு தோல்வி அடைந்தவர்களுக்கு ரூ.200, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300. மாற்றுத்திறனாளிகள் 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை ரூ.600,  12 ஆம் வகுப்பு தேர்ச்சி, பட்டயப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்க ளுக்கு ரூ.400. மாற்றுத்திறனாளிகள் ரூ.750 மற்றும் பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.600. மாற்றுத் திறனாளிகள் பொருத்தவரை ரூ.1000 வீதம் மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.   இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டு மைய அலுவலகத்தில் மேற்காணும் கல்வித் தகுதிகளை பதிவு செய்து குறைந்தது 5 ஆண்டுகள் நிறைவு பெற்றி ருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளை பொருத்தவரை ஓராண்டு நிறைவு பெற்றிருந்தாலே போதும். பதிவினை தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும். கூடுதல் தகவ லுக்கு அலுவலக தொலைப்பேசி எண்- 044-27237124யை தொடர்பு கொள்ளலாம்.  இவ்வாறு தெரிவித்துள்ளார்.