districts

img

புத்தக திருவிழாவில் 1.5 லட்சம் பார்வையாளர்கள்

காஞ்சிபுரம்,ஜன.3- காஞ்சிபுரம் அண்ணா காவல் அரங்க மைதானத்தில் கடந்த 23-ந் தேதி தொடங்கிய புத்தக கண்காட்சியில் இதுவரை 1லட்சம் பார்வையாளர்கள் குவிந்துள்ளனர். இந்த புத்தக விழாவில் மொத்தம் 104 அரங்குகள் அமைக்கப்பட்டு தினந்தோறும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. புத்தக திருவிழாவில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். 1 லட்சத்து 50 ஆயிரம் பார்வையாளர்கள் புத்தக திருவிழாவினை பார்வையிட்டு உள்ளனர். மேலும் 80 ஆயிரம் புத்தகங்கள் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் விற்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புத்தக கண்காட்சியின் நிறைவு விழா நடைபெற்றது. மாவட்டஆட்சியர் ஆர்த்தி தலைமை தாங்கினார். சிறப்பாக பணிபுரிந்த 149 அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.