கள்ளக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் வைத்திருக்கும் பொதுமக்களுக்கு 5 சவரன் நகை கடன் தள்ளுபடி செய்வதற்கான சான்றிதழை நகரமன்ற தலைவர் ஆர்.சுப்பராயலு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற துணைத் தலைவர் சமீம் பானு மற்றும் ஒன்றிய செயலாளர் சி வெங்கடாசலம் மற்றும் மாவட்ட கவுன்சிலர் புவனேஸ்வரி பெருமாள் மற்றும் மாவட்ட ஒன்றிய குழு துணைத் தலைவர் எஸ்.என்.டி. முருகன் மற்றும் கள்ளக்குறிச்சி நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.