districts

img

பொங்கல்: மண் பானை விற்பனை அமோகம்!

கள்ளக்குறிச்சி,ஜன. 14- கள்ளக்குறிச்சி மாவட் டம், உளுந்தூர்பேட்டை பிள்ளையார் குப்பம் அடுத்த ஆத்தூர் ஊராட்சி மன்றத்திற்குட்ட பகுதியில் ஐந்தாவது தலைமுறையாக மண்பாண்டங்கள் தயாரிக்கும் தொழில் செய்து வருகின்றனர். நவீன உலோக பாத்திரங்கள் எத்தனையோ வந்தாலும், கிராமப்புறங்களில் இன்னும் மண்பானை சமை யல் என்பது ஒரு அங்கமாகும். இந்தப் பகுதியில் மண் பானை, சட்டி, தோசை கல், மண் அடுப்பு, கழனித் தொட்டி, மண் கலயம், மண் குதிரைகளை செய்து வருகின்றனர். இதுகுறித்து குமார் என்பவர் கூறுகையில், “இங்கு களிமண் எடுப்பது மிகவும் சிரமமாக உள்ளது. இந்த தொழிலை விடவும் முடியவில்லை. பானைகளை தயாரித்து சைக்கிள் மூலம் கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறோம். பொங்கல்  திருநாளுக்கு மட்டும் தான் நேரடியாக வந்து பானையை வாங்கிச் செல்வார்கள். அரசு பானை களை கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலம் மக்க ளுக்கு வழங்கினால் எங்களைப் போன்று பாரம்பரிய தொழில் செய்பவர்களுக்கு உதவி யாக இருக்கும் என்றார். -சசிகுமார்