கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறையின் சார்பில் நடைபெற்ற குழந்தைத் திருமணங்களை தடுக்கும் விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் என்.ஸ்ரீதர் தொடங்கி வைத்தார். “வளர் இளம் பெண் மணப்பெண் அல்ல”, “ஒன்றுபடுவோம் உறுதியேற்போம் குழந்தைத் திருமணம் இல்லா சமுதாயம் படைப்போம்” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பள்ளி மாணவிகள் ஏந்திச் சென்றனர். இதில் சமூக நலன் மற்றும் உரிமைகள் துறை அலுவலர் செ.தீபிகா, முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் அலுவலர் எஸ்.செல்வி, குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.