கள்ளக்குறிச்சி, அக். 8- கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளராக வாணியல் ஆறுமுகத்தை திமுக தலைமைக் கழகம் அறிவித்தது. இதையடுத்து சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சங்கராபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயசூரியன் தலைமையில் புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்ட துணைச் செயலாளர் வாணியந்தல் ஆறுமுகம் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டா லினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது திமுக பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன், டி.ஆர் பாலு எம்பி, ஆ.ராசா எம்.பி ஆகியோர் உடன்னிந்தனர். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ, பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரும் கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப் பாளருமான ஏ.வ.வேலு ஆகியோரையும் சந்தித்து ஆறுமுகம் வாழ்த்து பெற்றார்.