districts

கால்நடை பண்ணைகள் அமைக்க அழைப்பு

கள்ளக்குறிச்சி, அக். 21- கால்நடை பண்ணைகள் அமைக்க  கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தொழில் முனைவோருக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: ஒன்றிய அரசு மீன்வளம் கால்நடை பரா மரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கால்நடை பராமரிப்பு மற்றும்  பால்வளத் துறையின் மூலமாக செயல் படுத்தப்படும் தேசிய கால்நடைய இயக்கத்தின் கீழ் 2021-22ஆம் ஆண்டு முதல் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கோழி வளர்க்க முனைவோர் 1,000 நாட்டுக்கோழிகள் கொண்ட பண்ணை அமைத்து முட்டை உற்பத்தி செய்து, கோழிக்குஞ்சு பொரிப் பகம் வழி கோழி குஞ்சுகள் உற்பத்தி செய்து  நான்கு வாரம் வளர்த்து விற்க மொத்த திட்ட செலவில் மூலதனத்தில் 50 விழுக்காடு மானியம் அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை  மணி வழங்கப்படும். 500 பெண் ஆடுகள் மற்றும் 25 கிடா ஆடுகள் கொண்ட அலகுகள்  அமைக்க மொத்த திட்ட செலவில், மூலதனத்தில் 50 விழுக்காடு மானியம் அதிக பட்சமாக ரூ. 50 லட்சம் வரை மானியம் இரண்டு தவணைகளில் வழங்கப்படும்.

100 பெண் பன்றிகள் மற்றும் 25 ஆண் பன்றிகள் கொண்ட அலகுகள் அமைக்க மொத்த திட்ட செலவில் மூலதனத்தில் 50 விழுக்காடு மானியம் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். தீவனம் மற்றும் தீவனப்பயிர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக ஓராண்டில் 2000 முதல் 2400 மெட்ரிக் டன் வைக்கோல், ஊறுகாய் புல், ஒரு நாளில் 30 மெட்ரிக் டன்  மொத்த கலப்பு தீவனம், தீவன கட்டி தயாரிப்பில் மற்றும் சேமித்தல் பணிகளை மேற்கொள்ள முனைவோருக்கு தளவாடங் கள் வாங்க மொத்த திட்ட செலவில் மூலதனத்தில் 50 விழுக்காடு மானியம் அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரை மானியம்  வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் தனிநபர் சுய உதவிக்  குழுக்கள், விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்பு, விவசாய கூட்டுறவுகள் கூட்டுப்  பொறுப்பு சங்கங்கள், பிரிவு 8 நிறுவனங்கள் ஆகியவை தகுதியானவர்கள் ஆவார். முனைவோர் சொந்தமாக அல்லது குத்த கைக்கு எடுக்கப்பட்ட நிலம் வைத்திருக்க  வேண்டும். தொழில் முனைவோர் தகுதி யுள்ள நிறுவனங்கள் திட்டத்திற்கான வங்கி  கடன் அனுமதி அல்லது வங்கி உத்திர வாதத்தை பெற வேண்டும். திட்டமதிப்பீட்டிற் கான அங்கீகாரத்தையும் பெற வேண்டும். பயன் பெற விரும்பவோர் http://nlm.udyamimitra.in/ என்ற இணையதளம் வாயி லாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இணையதளம் வாயிலாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களை இத்திட்டத்தை மாநில  அளவில் செயல்படுத்தும் நிறுவனமான தமிழ்நாடு கால்நடை மேம்பாட்டு முகமை யின் திட்ட மதிப்பீட்டு குழுவால் பரிசீலிக்கப் பட்டு திட்ட வழிகாட்டுதலின்படி உள்ள வற்றை கடன் வசதி பெற வங்கிகளுக்கு அனுப்பப்படும். பின்னர் ஒன்றிய அரசின் அங்கீகாரம் பெற அனுப்பப்படும் பணிகள் நிறைவு பெறுவதன் அடிப்படையில் மானி யம் இரண்டு தவணைகளில் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;