கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ஆர்.ஜி.எஸ்.ஏ. திட்டத்தின் கீழ் 50 லட்சம் மதிப்பில் மாவட்ட ஊரக வளர் மையக் கட்டடத்திற்கு மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் புவனேஸ்வரி பெருமாள் அடிக்கல் நாட்டினார். ஒன்றியச் செயலாளர் வெங்கடாசலம், நகரமன்றத் தலைவர் சுப்பராயலு, நகரமன்ற துணைத் தலைவர் சமீம் பானு. மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள் மடம் பெருமாள், காமராஜ், சண்முகம், ராமமூர்த்தி, முருகன், மாவட்ட கவுன்சிலர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.