கல்வி நிலையங்களில் தொடரும் மாணவர்களின் மரணத்தை தடுக்க வேண்டும், ஸ்ரீமதி மரணத்திற்கு காரணமான கள்ளக்குறிச்சி தனியார் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும், மாணவியின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் விருகை பள்ளி கிளை சார்பில் திங்களன்று (ஜூலை 18) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.