கள்ளக்குறிச்சி,ஜூன் 5- கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வருகின்ற 22 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் வருகை தந்து நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். அதற்காக கள்ளக்குறிச்சி உலகங் காத்தான் பேருந்தும் நிறுத்தம் அருகில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த மைதானத்தை நெடுஞ் சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட ரங்கில் நடந்த ஆலோ சனைக் கூட்டத்திலும் அமைச்சர் பங்கேற்றார். அப்போது, முதலமைச்சர் பங்கேற்கும் விழா வில் நலத்திட்ட உதவி கள் வழங்குவது குறித்து விரிவாக ஆலோசிக்கப் பட்டது. இந்த நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் உதய சூரியன், வசந்தம் கார்த்தி கேயன், மணிகண்ணன், மாவட்டக்குழுத் தலைவர் புவனேஸ்வரி பெருமாள், மாவட்ட திட்ட இயக்குநர் மணி, ஒன்றியக்குழுத் தலைவர்கள், நகரமன்றத் தலைவர்கள் மற்றும் அனைத்து துறை அரசு அதிகாரிகளும் பங்கேற்ற னர்.