districts

img

புத்தகங்களே மனிதர்களை சிறந்தவர்களாக்கும்: வீ.ப.ஜெயசீலன்

கள்ளக்குறிச்சி, டிச. 26- புத்தகங்களே ஒரு மனிதனை சிறந்தவராக உருவாக்கும் என கள்ளக்குறிச்சி புத்தக திருவிழாவில்  செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் தெரி வித்தார் கள்ளக்குறிச்சி-சென்னை புறவழிச் சாலை திடலில் நடைபெற்று வரும் ‘கல்லை’ புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டு வீ.ப.ஜெயசீலன் பேசு கையில், “ஒரு புத்தகம் குரலற்றவர்க ளின் குரலாக சமூகத்திடமும் அர சாங்கத்திடமும் எவ்வாறு பேசு கிறதோ, தனி மனிதரிடம் எவ்வாறு பேசுகிறதோ அதுவே அந்த புத்தகத்தின், எழுத்தாளரின் வெற்றி யாகும். ஒரு புத்தகத்தின் ஒரு வரி, ஒரு மனிதனின் ஊன்றுகோலாக நின்று, உலகில் பல உயரங்களை எட்டு வதற்கு உதவுகிறது. பள்ளி மாண வர்கள் புத்தகங்களை வாங்கிப் படிக்க வேண்டும் என்ற உந்துதலே, ஒரு மாணவனை தவறான பாதை யில் செல்வதை தடுக்கும்” என்றார். தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் சு.சுந்தர் ராஜன், வருவாய் கோட்டாட்சியர்கள் ச.பவித்ரா (கள்ளக்குறிச்சி), ஜெ. யோகஜோதி (திருக்கோவிலூர்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.