districts

img

பகத்சிங் நினைவு தின  மோட்டார் சைக்கிள் பிரச்சாரம்  

கள்ளக்குறிச்சி, மார்ச் 30 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாவீரர்கள்,  பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவு நாளையொட்டி 150 கி.மீ. மோட்டர் சைக்கிள் பிரச்சாரம் கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது. அண்ணா நகரில் துவங்கிய பிரச்சாரத்தை முன்னாள் சுகாதார இணை இயக்குனர் வி.உதயகுமார் துவங்கி வைத்தார். கல்லை நகர் மன்றத் தலைவர் ஆர்.சுப்பராயலு, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத்  தலைவர் ஜி.ஆனந்தன், மாவட்டத் தலைவர் வி.ராஜா, வாலிபர் சங்க மாநில இணைச் செயலாளர் செல்வராஜ், மாவட்டத் தலைவர் மு.சிவகுமார், செயலாளர் எம்.கே.பழனி,  தமுஎகச மாவட்டச் செயலாளர் கே.வேலாயுதம், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் பி.சின்னராசு ஆகியோர்  வாழ்த்திப் பேசினர். மாவட்டத்தில் புதிய தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும், மூங்கில் துறைப்பட்டு கச்சராபாளையம் செங்கல்வராயன் ஆகிய சர்க்கரை ஆலைகளில் இருந்து  வரும் கரும்பு சக்கையை பயன்படுத்தி காகித தொழிற்சாலை  அமைக்க வேண்டும், உளுந்தூர்பேட்டை சங்கராபுரம் சின்னசேலம் தாலுகாவில் புதிய அரசு கலைக் கல்லூரி துவங்க வேண்டும், கல்வராயன் மலையில் உள்ள சுற்றுலா மையங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கி சாலை, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பிரச்சாரம் நடைபெற்றது.

;