கரூர், அக்.18 - கிராமப் புற மக்களின் ஒரே நம்பிக்கை மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மட்டுமே. தொழிலா ளர்களுக்கு நூறு நாள் வேலை வழங்க வேண்டும். ஊதியத்தை முறையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாதர் சங்கத்தினர் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாதர் சங்க மாவட்டத் தலைவர் வி.சசிகலா, மாவட்ட துணை தலைவர் இந்துமதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மா.ஜோதிபாசு, சிஐடியு மாவட்ட செயலாளர் சி.முருகே சன், கரூர் மாநகரச் செயலாளர் எம்.தண்டபாணி ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மாவட்டப் பொருளாளர் எம்.ராஜேஸ்வரி நன்றி கூறினார். மாதர் சங்கம் சார்பில் திருச்சி மாவட்டம் திருவெறும் பூர் தாலுகா அலுவலக வளாகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு சிபிஎம் தாலுகா செயலாளர் மல்லிகா தலைமை வகித்தார்.