கரூர், ஏப்.11- கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சி ஒன்றி யத்திற்குட்பட்ட, மேலபகுதிப்பட்டி, தரங் கம்பட்டி ஊராட்சி, மற்றும் மாவத்தூர் ஊராட்சி ஆகிய பகுதிகளில் செவ்வா யன்று அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டம் - 2022 - 2023 கீழ் மேற் கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் த.பிரபுசங்கர் நேரில் சென்று பார்வை யிட்டார். கரூர் மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் – 2022-2023 கீழ் ரூ.12.96 கோடி மதிப்பீட்டில் 242 பணி கள் நடைபெற்று வருகின்றன. கடவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதி களில் ரூ.1.36 கோடி மதிப்பீட்டில் 25 பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் அடிப்படையில் செவ்வாயன்று கடவூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, தரங்கம்பட்டி ஊராட்சி கிராமத்தில் வையா ழிமடை கிராமத்தில் ரூ.6.36 லட்சம் மதிப் பீட்டில் குளம் உட்புறப் பகுதிகளில் தடுப்புச் சுவர் மற்றும் படித்துறை அமைக்கப பட்டுள்ள பணிகள், அதே பகுதியில் ரூ. 4.12 மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மயானக் கொட்டகை பணி, தரங்கம்பட்டி செல்வ நகர் பகுதியில் ரூ.2.30 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற சிமெண்ட் சாலை பணி, மாவத்தூர் ஊராட்சிப் பகுதி கழுத்தரிக்கா பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.5.80 லட்சம் மதிப்பீட்டில் பெண்களுக்கான கழிப்பறை கட்டிடம் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டார்.
மேலும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலபகுதிப்பட்டி சமத்துவபுரத்தில் புனரமைக்கப்பட்ட வீடுகள், சாலைகள்-விளையாட்டு மைதானம்-பெரியார் சிலை சுற்றுப்புறத்தில் சீரமைக்கும் பணிகள், சமத்துவபுரம் நுழைவாயில் பகுதிகளில் பணிகள் நடைபெற்று வருவதை பார்வை யிட்டார். அப்போது குடிநீர் வசதி, அங்கன் வாடி மையம் அமைத்தல், தெரு விளக்கு வசதிகள், உள்ளிட்ட கோரிக்கைகளை பொதுமக்கள் கேட்டதற்கு இணங்க அனைத்து வசதிகளையும் உடனுக்குடன் நிறைவேற்றிட அலுவலர்களுக்கு அறி வுறுத்தினார். வீரணம்பட்டி பகுதியில் ரூ.2.70 லட்சம் மதிப்பீட்டில் பாரதப் பிரதமர் வீடு கட்டும் திட்டப் பணிகளையும், அதே பகுதிகளில் ரூ.4.12 லட்சம் மதிப்பீட்டில் வெள்ளக்குளம் வாரியில் மழைநீர் உறிஞ்சிக்குழி அமைக் கும் பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டார். இந்த பயணத்தின் போது திட்ட இயக்கு நர் ஊரக வளர்ச்சி முகமை வாணி ஈஸ்வரி, செயற்பொறியாளர் பிரேம்குமார், கடவூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராணி, சுரேஷ், ஊராட்சி மன்ற தலைவர் மாணிக் கம் மற்றும் அரசு அலுவலர்கள் உடனி ருந்தனர்.