கரூர், மார்ச் 12 - தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் இயங்கி வரும் ஹட்சன் (அருண் ஐஸ்கிரீம், ஆரோக்யா பால்) நிறுவனத்தில் 6 மாதத்திற்கும் மேலாக போராடி வருகிற தொழிலாளர்களின் பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு கரூர் மாவட்ட குழு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கரூர் ஆர்.எம்.எஸ் அலுவலகம் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு கரூர் மாவட்ட தலைவர் ஜி.ஜீவானந்தம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சி.முருகேசன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் சி.ஆர்.ராஜாமுகமது, டாஸ்மாக் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.