கரூர், பிப்.26 - தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதில் மாநிலம் முழுவதும் ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும். தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் அராஜக போக்கை கண்டித்தும் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கரூர் மாவட்ட குழு சார்பில் கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜ.ஜெயராஜ் தலைமை வகித்தார். கரூர் கல்வி மாவட்ட செயலாளர் ஆ.பிரான்சிஸ் டேனியல் ராஜா வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் வீ.மோகன் முன்னிலை வகித்தார். மாநிலச் செயலாளர் த.சகிலா கண்டன உரையாற்றினார். மாவட்ட பொருளாளர் ஆ.தமிழரசி நன்றி கூறினார்.