கரூர், டிச.1- பள்ளிக்கல்வித்துறை அமைச்சுப் பணியாளர் களுக்கு உரிய காலத்தில் ஊதியம் பெற்று வழங்கு வதற்கு நடவடிக்கை எடுக் காத பள்ளி கல்வித்துறை ஆணையரின் அலட்சியப் போக்கினை கண்டித்தும், உடனடியாக ஊதியம் பெற்று வழங்க துரித நட வடிக்கை எடுக்க வலியுறுத்தி யும் தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங் கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில் கரூர் மாவட்ட கல்வி அலுவலர் அலுவல கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் கோ.லட்சுமணன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வ. கோபி வரவேற்றார். தமிழ் நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் பொன் ஜெயராம், அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலை வர் மொ.ஞானத்தம்பி, மாவட்டத் தலைவர் எம். சுப்பிரமணியன், வரு வாய்த்துறை அலுவலர்கள் சங்க மாநிலச் செயலாளர் எம்.எஸ்.அன்பழகன், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செய லாளர் ஜ.ஜெயராஜ் ஆகி யோர் விளக்கிப் பேசினர். இதில் 100-க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர்.