districts

img

சிஐடியு கரூர் மாவட்ட மாநாடு: வரவேற்புக் குழு அமைப்பு

கரூர், ஜூலை 26 - சிஐடியு கரூர் மாவட்டக் குழு சார்பில், சங்கத்தின் கரூர் மாவட்ட மாநாட்டு வரவேற்பு  குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம் தலைமை  வகித்தார். சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் ஆறுமுகம் சிறப்புரையாற்றினார்.  மாவட்டச் செயலாளர் சி.முருகேசன், எல்ஐசி ஊழியர் சங்க தஞ்சை கோட்ட துணைத் தலைவர் கணேசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எம். சுப்பிரமணியன், மாவட்டச் செயலாளர் கெ. சக்திவேல், மாவட்ட பொருளாளர் பொன் ஜெயராம், வங்கி ஊழியர் சங்க மாவட்ட செய லாளர் வெங்கடேசன், பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் ஐ. ஜான்பாஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.  சிஐடியு கரூர் மாவட்ட 9 ஆவது மாநாட்டை  செப்டம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் கரூரில் நடத்துவதென வரவேற்பு குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டு வரவேற்பு குழு தலைவராக கரூர் மாநக ராட்சி உறுப்பினர் எம்.தண்டபாணி, செயலா ளராக எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொருளாள ராக ஆர்.ஹோச்சிமின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டு நிதியின் முதல்  தவணையாக ரூ.33 ஆயிரம் வழங்கப்பட்டது.