districts

img

தலித் மக்கள் மீது பட்டாசைக் கொளுத்திப் போட்டு சாதி ஆதிக்க வெறியர்கள் தாக்குதல்!

கரூர், ஏப். 30 - கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம், சிவாயம் ஊராட்சிக்கு உட்பட்ட ஈச்சம்பட்டியில் பட்டியலினத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இதே பகுதி யில் சாதி ஆதிக்கப் பிரிவினரும் வசிக்கி ன்றனர். இந்நிலையில், சாதி ஆதிக்கப் பிரிவினர் திருவிழாவையொட்டி பூத்தட்டு ஊர்வலம் நடத்தியுள்ளனர். இந்த பூத்தட்டு ஊர்வலம் பட்டியலின மக்களின் குடியிருப்பு பகுதியில் செல்லும்போது, அதனை பட்டியலின மக்கள் சாலையோரத்தில் நின்று வேடிக்கை பார்த்துள்ளனர்.'

அப்போது சாதி ஆதிக்க பிரிவினர் வெடியை பற்ற வைத்து, பட்டியலின மக்களின் மீது வீசியுள்ளனர். இதில், பெண்கள், ஆண்கள், குழந்தைகள் மீது வெடி பட்டு தீக்காயங்கள் ஏற் பட்டுள்ளன. அப்போது, ‘ஏன் வெடி களை எங்கள் மீது போடுகிறீர்கள்’ என்று பட்டியலின மக்கள் கேட்டதற்கு, ‘அப்படித்தான் போடுவோம் என்ன செய்வீர்கள்’ என்று கூறி, பத்துக்கும் மேற்பட்டோர் சேர்ந்து கொண்டு, பட்டியலின மக்களின் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதை எதிர்பார்க்காத அந்த பட்டிய லின மக்கள், அலறி அடித்துக் கொண்டு  ஓடியுள்ளனர். 4 வயது சிறுவனின் காலில் வெடி வெடித்து தீக்காயம் ஏற்பட்டுள் ளது. சாதி ஆதிக்க வெறியர்கள் நடத்திய இத்தாக்குதலில் கடுமை யாக பாதிக்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை காவல் ஆய்வா ளர் உதயகுமார் விசாரணை மேற் கொண்டு, ஈச்சம்பட்டியைச் சேர்ந்த  சுரேஷ், பிரவீன், பூபதி, அக்கரை பட்டியைச் சேர்ந்த அய்யப்பன் ஆகிய  4 பேர் மீது எஸ்.சி-எஸ்.டி. வன்கொடு மை பிரிவின்கீழ் வழக்குப் பதிந்துள் ளனர். மேலும், இதில் பூபதி, சுரேஷ் ஆகிய இரண்டு பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பட்டியலின மக்களை, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் பி. ராஜூ, அறம் மக்கள் வாழ்வாதார கூட்டமைப்பின் செயலாளர் வீரா கோபி, தலைவர் பழனி, பொருளாளர் சரவணன், துணைச் செயலாளர் செந்தில் முருகன், தமிழ்ப் புலிகள் மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன், வழக்கறிஞர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர் ஈச்சம்பட்டியில் நேரடி கள ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினர்.