கரூர், அக்.13- கரூரில், அகில இந்திய பிஎஸ்என்எல் டிஒடி ஓய்வூ தியர் சங்க மாவட்ட பேரவை கூட்டம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி. இளங்கோவன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலா ளர் டி.மனோகரன், மாவட்ட தலைவர் ஐ.ஜான்பாஷா, பிஎஸ்என்எல்இயு சங்க மாவட்ட துணைச் செயலாளர் ஜி.பாலசுப்பிரமணியன் ஆகியோர் பேசினர். இதில், ஏராளமானோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், ஒன்றிய மோடி அரசு பொதுத்துறை யை பாதுகாக்க வேண்டும். பொதுத்துறையின் பங்கு விற்பனையை கைவிட வேண்டும், ஒன்றிய மோடி அரசு தனியார் மையத்தை கைவிட வேண்டும், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு 4ஜி மற்றும் 5ஜி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 4ஜி, 5ஜிக்கு தேவையான கருவிகள் வாங்குவதற்கு டெண்டர் விடுவதற்கு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.