districts

img

சிஐடியு மாநில மாநாட்டு சுடர் பயணத்திற்கு வரவேற்பு

சிஐடியு 15வது மாநில மாநாடு நவ. 4-6 தேதிகளில் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் நடைபெறுகிறது. இதனையொட்டி மத்தியசென்னை மாவட்டத்திலிருந்து வியாழனன்று (அக்.27) மாநிலச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன் தலைமையில் தோழர் வி.பி.சிந்தன் நினைவுச் சுடர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நினைவுச் சுடருக்கு தென் சென்னை மாவட்டத்தில் தி.நகர் பேருந்து நிலையம் உள்ளிட்ட 5 மையங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வுகளில் மாநிலச் செயலாளர் சி.திருவேட்டை, தென்சென்னை மாவட்டத் தலைவர் இ.பொன்முடி, பொருளாளர் ஏ.நடராஜன், மத்தியசென்னை மாவட்டத் தலைவர் எம்.தயாளன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.