நாகர்கோவில், ஏப்.18- இராஜாக்கமங்கலம் தென்கடற்கரை யில் அய்யா வைகுண்டர் முப்பெரும் விழா நடைபெற்றது. பிள்ளையார்விளை அய்யா வைகுண்டர் நிழல் தாங்கலில் இருந்து ஊர்வலமாக முத்துக்குடை பிடித்து அகிலத்திரட்டு அம் மானை எடுத்துவரப்பட்டு சிறப்பு வழிபாடு களுடன் அகிலத்திரட்டு பெருவிழா நடை பெற்றது. தோள்சீலை போராட்டத்தின் 200 ஆவது ஆண்டுவிழாவுக்கு பாலபிரஜாபதி அடிக ளார் தலைமையில் சி.ராஜன், கே.காமராஜ், எம்.வெற்றிவேலன், கருங்கல் ஜார்ஜ் முன்னிலை வகித்தனர். தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நாகர்கோவில் மேயர் ரெ.மகேஷ், எஸ்.ரெத்தினமணி, ஆர்.தர்மலிங்கம், டி.செல்வராஜ், டி.நாக ராஜன், தொல்காப்பியன், பி.டி.ராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். லெமுரியா களரி குழுவினரின் சாகச நிகழ்ச்சிகளும் சிலம்பம் போன்ற நிகழ்வுக ளும் நடைபெற்றன. கேரள, தமிழக நாட்டுப் புறக்கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சித்திரை முழுநாள் விழாவாக முப்பெரும் விழா நடைபெற்றது.