கடலூர், நவ. 22- தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி கடலூர் தபால் நிலையம் முன்பு மாநகராட்சி தொழி லாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 20 வகை நிரந்தரப் பணி யிடங்களை தனியாருக்கு வழங்கிடும் அரசாணை 152ஐ திரும்ப பெற வேண்டும், கடலூர் மாநகராட்சி தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்து கூட்டுறவு சங்கத்தில் கட்ட வேண்டிய தொகை ரூபாய் 2 கோடி 31 லட்சத்தை உடனே செலுத்த வேண்டும், மாநகராட்சி தொழிலாளர்களுக்கு ஏற்கனவே நடைமுறையில் இருந்தவாறு ஞாயிற்றுக்கிழமை வார விடு முறை வழங்க வேண்டும், தொழி லாளர்களின் தேவைக்கு ஏற்ப விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்ட தலைவர் பி.கருப்பையன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் டி.பழனி வேல், நிறுவனத் தலைவர் ச.சிவ ராமன், மாவட்ட இணைச் செயலாளர்கள் வி.கிருஷ்ண மூர்த்தி, பி.ஆனந்த நாராயணன், வி.திருமுருகன், கே.ஸ்டாலின், துணைத் தலைவர்கள் ஆர்.ஆள வந்தார், வி.சுப்புராயன், எஸ்.சாந்தகுமாரி, கே.சாவித்திரி, ஜே.ராஜேஷ் கண்ணன், மாநகராட்சி தொழிலாளர் சங்க நிர்வாகிகள் பி. ராஜேந்திரன், பி.அரசகுமாரன், செல்வராஜ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். அதேபோல் திருப்பத்தூர் தாலுகா அலுவகம் அருகே சிஐடியு திருப்பத்தூர் மாவட்ட அமைப்பாளர் சி.கேசவன் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் ஏ.ரங்கன், சிபிஎம் தாலுகா செய லாளர் எம்.காசி, எஸ்.ஜோதி, ஜி.ரவி, எஸ்.சிவசீலன், எம்.சர வணன், சி.முருகேசன் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். வேலூர் அண்ணா கலை யரங்கம் அருகே சிஐடியு மாவட்டத் தலைவர் டி.முரளி தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர் எஸ்.பரசுராமன், நிர்வாகிகள் எம்.காசி, பி.காத்த வராயன், சி.சரவணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் வி. குபேந்திரன் ஆகியோர் பேசி னர்.