districts

img

பொதுப்பாதையில் சாமியை கொண்டு செல்ல அனுமதி கேட்கும் மக்கள்

கடலூர், பிப். 21- செம்மங்குப்பத்தில் பொதுப்பாதையில் சாமி செல்ல அனுமதிக்கக் கோரி கடலூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் செம்மங்குப்பம் கிராமத்தில் ஆதி திராவிடர் பகுதியில் உள்ள புவனேஸ்வரி அம்மன் சாமியை கடந்த 16ஆம் தேதி மாசிமக உற்சவத்தையொட்டி கடற்கரைக்கு எடுத்துச் செல்ல ஆயத்தமான போது செம்மங்குப்பம் வன்னியர் பகுதியை சேர்ந்த சாதி ஆதிக்க வெறியர்கள் சிலர் சாமியை இந்த வழியாக எடுத்துச்செல்ல அனுமதிக்க மாட்டோம் எனக்கூறி தடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று வருமான வரித் துறையினரும், காவல் துறையினரும் இருதரப்பினரிடையே பேச்சு வார்த்தை நடத்தினர். சாமி ஊர்வலத்தை வேறு பாதை வழியாக கொண்டு செல்ல அறிவுறுத்தினர். இதனை ஏற்க மறுத்த கிராம மக்கள் அன்றைக்கு ஏற்பாடு செய்திருந்த சாமி ஊர்வலத்தை ரத்து செய்தனர். இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக சாமி ஊர்வலம் சென்று வந்த பாதை வழியாக ஊர்வலம் செல்ல அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் ஆட்சியர் அலுவ லகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஊர் மக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரும், அதிகாரிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, 23ஆம் தேதி சமாதானக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர். இதை யடுத்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.  இதில் கிராம தலைவர் ராமச்சந்திரன், முருகன் ராஜேந்திரன் கோபி வேலன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.கருப்பை யன், ஜே.ராஜேஷ் கண்ணன், மாவட்டக் குழு உறுப்பினர் ஆளவந்தார், விசிக மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் திருமேனி, வழக்கறிஞர் புருஷோத்தமன், மாவட்ட அமை ப்பாளர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.