districts

img

கூட்டணி வேண்டாம்... ஆனால், பதவி மட்டும் வேண்டுமா?

 கடலூர், ஏப்.2- கடலூர் நாடாளு மன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார் பில் காங்கிரஸ் வேட்  பாளராக விஷ்ணு பிரசாத் போட்டியிடு கிறார். இவர் பாட் டாளி மக்கள் கட்சி யின் தலைவர் அன்புமணி ராமதாசின் மைத்துனர் ஆவார். 

இந்த தொகுதியில் விஷ்ணு பிர சாத்தை எதிர்த்து, இயக்குநர் தங்கர் பச்  சானை பாமக களமிறக்கியுள்ளது.

இதனால், கடலூர் நாடாளுமன்ற தேர்தல் களம் வெல்லப் போவது மாமன்  கட்சியா? மச்சான் கட்சியா? என்பதாக உள்ளது. இந்நிலையில், “உறவு வேறு; அரசி யல் வேறு” என்று பேசியுள்ள காங்கி ரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத், “போரா ட்டம் என்று வந்துவிட்டால் எதிரில் நிற்பது மாமனாக இருந்தாலும், மச்சனாக இருந்தாலும் குறி தவறாது..” என்றார். ‘பாமகவினர் தனியாக நின்றிருந்தால் கூட ஏற்றுக் கொண்டிருக்கலாம்; பாஜக வுடன் கூட்டணி வைத்ததைத் தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என்று கூறிய விஷ்ணு பிரசாத், “பாமகவிற்கு கொள்கைகள் இல்லை” என்றும் சாடினார்.

“6 மாதத்திற்கு முன்பு என்எல்சிக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை பாமகவினர் நடத்தினார்கள். இந்த என்எல்சி நிறுவனம் யாருடைய கையில்  உள்ளதோ, தற்போது அவர்களிடமே (பாஜகவிடமே) கூட்டணி வைத்துள் ளார்கள். நாளை எப்படி நெய்வேலியில் வாக்கு கேட்பீர்கள். அதனை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா?” எனக் கேள்வி யெழுப்பினார். மேலும் “கூட்டணி மூலமே உங்க ளுக்கு (அன்புமணிக்கு) மாநிலங்களவை எம்.பி. பதவி கிடைத்தது. ஆனால், தற்  போது (அதிமுக) கூட்டணியை விட்டு  வெளியில் வந்த பிறகு, எம்.பி. பதவி யை தூக்கி எறிய வேண்டாமா?” என்று கேட்ட விஷ்ணு பிரசாத், “விடுதலை சிறுத்  தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ஒருமுறை கூட்டணியில் பெற்ற சட்ட மன்ற உறுப்பினர் பதவியை, அந்த கூட்ட ணியை விட்டு வெளியில் வந்தவுடன் ராஜி னாமா செய்தார். அதுதான் சரியானது” என்றும் குறிப்பிட்டார்.