districts

img

கடலூரில் வள்ளலார் இலக்கிய விருது வழங்கும் விழா

கடலூர்,பிப்.4- ராமலிங்கர் இலக்கிய அறக்கட்டளை சார்பில் கடலூர் மஞ்சக்குப்பத்தில் வள்ள லார் இலக்கிய விருது வழங்க நிகழ்ச்சி நடை பெற்றது. இந்த விழாவில் சாகித்ய அகடாமி விருது பெற்ற குறிஞ்சி வேளனார், கடலூர் சன்மார்க்க அன்பர் இரா. தேவராஜ், சீர்காழி சன்மார்க்க அன்பர் வெங்கடகிருஷ்ணன் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.  இந்த நிகழ்ச்சிக்கு பின்னலூர் பாலு.பச்சையப்பன் தலைமை தாங்கினார். நா.ஆவுடையப்பன் வரவேற்றார். பி.ஆர். கணேசன் முன்னிலை வைத்தார். விவேகானந்தன் அறிமுக உரையாற்றி னார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன் கலந்து கொண்டு விருதுகள் மற்றும் பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியை வாழ்த்தி பாலகங்கா, சொக்கலிங்கம், குடியிருப்பு சங்க நிர்வாகிகள் பி. வெங்கடேசன், எம்.மருதவாணன், காசிநாதன், டி. புருஷோத்தமன், தேவநாதன் உள்ளிட்டோர் பேசினர். சஞ்சீவி நன்றி கூறினார்.