கடலூர், ஜூலை.20- கடலூர் மாவட்டத்தில் சுகாதாரத்துறையில் காலிப்பணி யிடம் நிரப்பப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரி வித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் அலுவலகம், அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நகர ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தற்காலிக தொகுப்பூதிய அடைப்படையில் மாவட்ட நல வாழ்வு சங்கத்தின் மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அதன்படி மருந்தாளுநர், பல் மருத்துவ உதவியாளர், இயன்முறை மருத்துவர், நகர சுகாதார செவிலியர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர், ஓட்டுநர் (நடமாடும் மருத்துவக்குழு), கண்பார்வை மருத்துவர், குளிர்சாதன இயந்திர பழுதுபார்ப்பவர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பதவிகளுக்கு உரிய கல்வித்தகுதி, மாத தொகுப்பூதியம், காலி பணியிடங்களின் எண்ணிக்கை போன்ற விவரங்கள் cuddalore.tn.nic.in என்ற கடலூர் மாவட்ட இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.