கடலூர், ஜன. 10- என்எல்சியில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி ஸ்கியூ பாலம் அருகே என்எல்சி தொழி லாளர் ஊழியர் சங்கத்தின் சார்பில் (சிஐடியு) சார்பில் உண்ணாநிலைப் போராட்டம் செவ்வாயன்று (ஜன. 10) நடைபெற்றது. என்எல்சி தொழிலாளர்களின் வாரிசு கள், நிலம் கொடுத்தோர், வீடு கொடுத் தோர், ஏடிஎஸ் பயிற்சி முடித்தோருக்கு மற்றும் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும், நிரந்தர, இன்கோசர்வ், ஹவுசி கோஸ், காண்ட்ராக்ட் மற்றும் ஓய்வு பெற்ற தொழி லாளர்களின் கோரிக்கைகளை உடனடி யாக நிறைவேற்ற வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் டி.ஜெயராமன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பி.கருப்பையன் போராட்டத்தை துவக்கி வைத்தார். பொதுச்செயலாளர் எஸ்.திருஅரசு, மாவட்டச் செயலாளர் டி.பழனி வேல், அலுவலக செயலாளர் எம்.அன்பழகன், துணைத்தலைவர்கள் ஆர்.பாலமுருகன், எஸ்.முருகன், முன்னாள் தலைவர்கள் முத்துவேல், வேல்முருகன், ஜி. குப்புசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். சங்கத்தின் சிறப்பு தலைவர் எஸ்.கண்ணன் நிறைவு செய்து பேசினார்.