districts

img

கடலூரில் கைத்தறி பூங்கா அமைக்க வலியுறுத்தல்

கடலூர், ஜூலை 23- கடலூர் மாவட்டத்தில் கைத்தறி பூங்கா அமைக்க வேண்டும் என்று கைத்தறி நெசவு பாவுபட்டறை தொழிலாளர் சங்க மாநாடு வலி யுறுத்தியுள்ளது. சங்கத்தின் 8ஆவது மாவட்ட மாநாடு தலைவர் ஆர்.ஆள வந்தார் தலைமையில் கடலூரில் நடை பெற்றது. இணைச் செயலாளர் கே.குமார் வரவேற்றார். சங்க கொடியை இணைச் செயலாளர் ஆர்.கல்யாணசுந்தரம் ஏற்றினார். இணைச் செயலாளர் ஆர். பன்னீர்செல்வம் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந் தார். மாட்டுவண்டி தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வி.திருமுருகன் மாநாட்டை துவக்கி வைத்தார். மாவட்டச் செய லாளர் எஸ்.தட்சணாமூர்த்தி வேலை அறிக்கையையும், பொரு ளாளர் தயாளன் வரவு-செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெ.ராஜேஷ் கண்ணன் வாழ்த்திப் பேசினார். சிஐடியு மாவட்டத் தலைவர் டி.பழனிவேல் நிறைவு செய்து பேசினார்.
தீர்மானங்கள்
அனைத்து கைத்தறி மற்றும் பெடல் தறி நெசவாளர்களுக்கு வீடு கட்டுவதற்கான மானியத் தொகையை  ரூபாய் நான்கு லட்ச மாக உயர்த்தி வழங்க வேண்டும், கைத்தறி ரகங்களின் பாரம்பரியத்தை பாதுகாக்க கடலூர் மாவட்டத்தில் கைத்தறி பூங்கா அமைக்க வேண்டும். கைத்தறி நெசவாளர்களின் நல்வாழ்விற்காக ஆரோக்கிய நெசவாளர் நல்வாழ்வு மற்றும் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை உடனே நிறைவேற்ற வேண்டும். 2021ஆம் ஆண்டு கடும் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து நெசவாளர்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் நிவாரண வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகிகள்
மாவட்டத் தலைவராக ஆர்.கல்யாணசுந்தரம், செயலாளராக எஸ்.தட்சிணாமூர்த்தி, பொருளாளராக இ.தயாளன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.