districts

img

கடலூரில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்

கடலூர், பிப். 11- நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்கும் வரை அதற்கான சட்டப் போராட்டம் தொட ரும் என்று கடலூரில் உதயநிதி ஸ்டாலின் கூறினார். கடலூர் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேருந்து நிலையம் அருகே திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பரப்புரை யில் நீட் ரகசியத்தை கூறுவதாக கூறி, உதய நிதியை காணவில்லை என்று கூறி வரு கிறார். நீட் ஒழிப்பிற்கான ரகசியமே பாஜக விற்கு அடிமையாக இல்லாமல் இருப்பது தான். இதனைக் கூட அவரால் தெரிந்துகொள்ள முடியவில்லை” என்றார். ஜெயலலிதா முதல்வராக இருந்த வரை தமிழகத்தில் நீட் தேர்வு வரவில்லை. தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறை வேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்பு தலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மசோதாவை திருப்பி அனுப்பியது குறித்து ஓராண்டாக அறிவிக்காமல் இருந்த ஆட்சி அதிமுகதான் என்றும் உதயாநிதி ஸ்டாலின் சாடினார். நீட் தேர்வால் தமிழகத்தில் 14 பேர் இறந்துள்ளனர். இனியும் இது தொடரக் கூடாது. நீட் விலக்கு கிடைக்கும் வரை எங்க ளது சட்டப்போராட்டம் தொடரும் என்றும் நல்லாட்சியின் சாதனை உள்ளாட்சியிலும் தொடர திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர் களை ஆதரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.