districts

 பயிற்சி பட்டறை

சிதம்பரம், மார்ச் 15- சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் இயக்குநரகமும், ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனமும் இணைந்து திறன் தனி மனிதத் திறன் வளர்த்தல் 3 நாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது. பல்கலைக்கழக துணை வேந்தர் இராம.கதிரேசன் துவங்கி வைத்து பேசினார். இதனைத் தொடர்ந்து, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் இயக்குநரகத்தின் இயக்குநர் கருணாகரன், அறிவியல் துறையின் இராமசாமி, சென்னை விளையாட்டு மேலாண்மை மற்றும் உளவியல் துறை முனைவர் பிரேம்குமார் ஆகியோர் உரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் விவசாயம், தோட்டக்கலை, பொறி யியல், தொழில் நுட்பம், கனிணி-அறிவி யியல், உளவியல் உள்ளிட்ட பல்வேறு துறை மாணவர்கள் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

;