districts

பட்டியலின பெண்ணை தாக்கிய தீட்சிதர்களை காப்பாற்றும் காவல்துறை

கடலூர், பிப். 21- சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி தரி சனம் செய்யச் சென்ற பட்டியலின பெண்ணை தாக்கிய தீட்சிதர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டக் குழு வலியு றுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செய லாளர் கோ.மாதவன் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த 13 ஆம் சாமி தரிசனம் செய்யச் சென்ற ஜெயஷீலா என்ற பட்டியலின பெண்ணை அங்கிருந்த தீட்சிதர்கள் சாதிப் பெயரைச் சொல்லி திட்டியும், கேவலமாக பேசியும். கையால் தாக்கியும் கீழே தள்ளியுள்ளனர். இது தீண்டாமை வன்கொடுமையாகும். இது குறித்து ஜெயஷீலா சிதம்பரம் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கும் பதிவு செய்ய ப்பட்டுள்ளது. வழக்குப் பதிவு செய்து ஒரு வாரம் ஆகியும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. சட்டத்திற்கு முன் அனைவரும் சமமான வர்கள் என்று கூறப்பட்டாலும், இதுவரை மாவட்ட காவல்துறையினர் இதுகுறித்து கண்டு கொள்ளமல் இருப்பதும், கைது செய்யாமல் இருப்பதும் நீதிமன்றத்திற்கு சென்று அவர்கள் முன்ஜாமீன் பெறுவ தற்கு உடந்தையாக செயல்படும் நடவடிக் கையாக உள்ளது. இது குற்றவாளிகள் அனை வரையும் தப்ப வைக்கும் சட்டவிரோதமான நடவடிக்கையாகும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சி தர்கள் பக்தர்களை தாக்குவது குறிப்பாக பெண்களை தாக்குவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களை கோவிலை மையமாக பயன்படுத்தி செயல்படுகின்றனர். மேலும் பட்டியலின மக்களை கோவிலுக்குள் நுழைய அனுமதிக்க மறுப்பது அப்படியே கோவிலுக்குள் நுழைபவர்களை தாக்குவது கேவலமாக பேசுவது, கொலை மிரட்டல் விடுவது தீண்டாமைக் கொடுமைகளை இழைப்பது போன்ற சட்டவிரோதமான நட வடிக்கைகளை தொடர்ந்து கடை பிடித்து வருகின்றனர்.அப்படி இவர்கள் மீது வரும் புகார்கள் மீது மாவட்ட காவல்துறை யினர் சட்டபூர்வமான நடவடிக்கை எடுப் பதில்லை. இது கூடுதலாக குற்றவாளிகளை ஊக்கப்படுத்தும் செயலாக அமைந்து விடு கிறது. எனவே தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கி றேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.