கடலூர் மாவட்டத்தில் 61 நாட்கள் மீன்பிடி தடை காலத்திற்கு பிறகு மீனவர்கள் சனிக்கிழமையன்று வங்கக் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இதனால் மீன்களின் விலைகள் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்மாவட்டத்தில் 49 மீனவ கிராமங்கள் உள்ளன இந்த கிராமங்களைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட விசை படகுகள் மற்றும் இழுவை படகுகள் மூலம் மீன் பிடிப்பதற்காக முதுநகர் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் கடலுக்குள் சென்றனர்.