சிதம்பரம், ஜூன் 22- சிதம்பரத்தில் ரூ. 48 செலவில் நூலகம் கட்டும் பணிக்காக அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிதம்பரம் நகரத்தில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக காசு கடைத் தெருவில் சிதம்பரம் கிளை நூலகம் தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்தது. அந்தக் கட்டிடம் பழுது ஏற்பட்டு, மழைக்காலங்களில் லட்ச கணக்கான புத்தகங்கள் வீணாகும் சூழல் ஏற்பட்டது. எனவே, இந்த நூலகத்திற்கு புதிதாக கட்டடம் நவீன வசதிகளுடன் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்தது. மேலும், சிதம்பரம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினராக இருந்த இன்றைய மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், அன்றைக்கு சிதம்பரம் நகர மன்றத் தலை வராக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பவுஜியா பேகம் ஆகி யோர் நகராட்சி அலுவலகத்திற்கு எதிரே நகராட்சிக்கு சொந்தமாக உள்ள இடத்தில் 4 ஆயிரம் சதுர அடி காலி இடத்தை நூலகம் கட்டுவதற்கு இலவசமாக தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். பிறகு, நகரமன்ற கூட்டத்தில் தீர்மான மும் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து 2014- ஆம் ஆண்டு நூலகம் கட்ட 4 ஆயி ரம் சதுர அடி இடம் வழங்கப்பட்டது. ஆனாலும், கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் நூலகம் கட்ட நிதி ஒதுக்கப்படவில்லை. இந்த நிலையில், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சிதம்பரம் சாராட்சியராக பணியாற்றிய மதுபாலன் ‘ நமக்கு நாமே திட்டம்’ மூலம் வணிகர்கள், நகை வியாபாரிகள் சங்கம், பொதுநல அமைப்புகளை ஒருங்கிணைத்து நூலகம் கட்டுவதற்கு மக்கள் பங்களிப்பு நிதியாக ரூ. 16 லட்சம் திரட்டினார். இந்த நிலை யில் அவர் பதவி உயர்வு பெற்று இட மாறுதலாகி சென்றார். அரசு சார்பில் ரூ.32 லட்சம் மானியம் வழங்கியதால் தற்போது 48 லட்சம் ரூபாய் செலவில் 1800 சதுர அடியில் நூலகத்திற்கு தரைதளம் நவீன நூலகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப் பட்டது. இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் நகர் மன்ற தலைவர் செந்தில்குமார், துணைத் தலைவர் முத்துக்குமரன், நகராட்சி ஆணையர் அஜிதா பர்வீனா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர்மன்ற உறுப்பி னர் தஸ்லீமா, காங். உறுப்பினர் மக்கீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.