districts

img

சாமியார்பேட்டை கடற்கரையை சுற்றுலாவை மேம்படுத்த ஆய்வு

சிதம்பரம், நவ.18- கடலூர் மாவட்டத்தில், மீன் வளத்துறை சார்பில் மேற் கொள்ளப்படும் திட்டப்பணி களை மாவட்ட ஆட்சியர் பால சுப்ரமணியம் ஆய்வு மேற் கொண்டார். அப்போது, சிதம்ப ரம் அருகேயுள்ள சாமியார் பேட்டை மீனவ கிராமத்தில் வானிலை முன்னெச்சரிக்கை செய்திகள் முறையாக கிடைக் கிறதா? என்றும் அதனை மீனவர்கள் முறையாக பின்பற்று கிறார்களா? என்றும் கேட்டறிந் தார். மேலும், மீன்பிடி இறங்கு தளத்தில் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா என்பதையும் ஆட்சியர் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து சாமி யார்பேட்டை மீனவ கிராமத்தில் சுற்றுலாவை மேம்பாடு செய்வ தற்கான இடத்தையும் பார்வை யிட்டார். பின்னர் காட்டுமன்னார் கோயில் வட்டம் லால்பேட்டை யிலுள்ள மீன் குஞ்சு வளர்ப்பு அரசு பண்ணையில் கட்லா, ரோகு, மிர்கால் மற்றும் சாதா  கெண்டை வகை மீன் குஞ்சு வளர்ப்பு பணிகளையும் சினை  மீன் வளர்ப்பு மற்றும் கெண்டை யின மீன் குஞ்சு பொறிப்பக கட்டு மான பணிகள், விரால் மீன் குஞ்சு  பொறிப்பக கட்டுமான பணிகளை யும் ஆய்வு மேற்கொண்டார்.