districts

வேலைநிறுத்தம் : மின்வாரிய அனைத்து சங்கங்கள் பங்கேற்பு

கடலூர், மார்ச் 19- மின்சார சட்டத் திருத்த மசோதாவை கைவிட வலியுறுத்தியும், வரும் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை கடலூர் மாவட்டத்தில் மாவட்டத்தில்  மின்வாரியத்தில் வெற்றிகரமாக  நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.  இது தொடர்பாக கடலூர் மாவட்ட தமிழ்நாடு மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு ஆலோசனை கூட்டம் சனிக்கிழமை  நடைபெற்றது. தொமுச மாநில துணைப் பொதுச்செயலாளர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சிஐடியு மாநில துணைப் பொதுச்செயலாளர் டி.பழனிவேல், பொருளாளர் சந்தானம், வெங்கடபதி(கணக்காயர் சங்கம்), மனோகரன், கருணாகரன் (ஐஎன்டியுசி),   ரவிச்சந்திரன், மாயவன் (ஐக்கிய சங்கம்), பரணி, ஜனார்த்தனன் (தொமுச), திலக் (அம்பேத்கர் அலுவலர் சங்கம்) ஆகியோர் சிறப்புரையாற்றினார்.

;