கடலூர், மார்ச் 10- உயிர்பலி வாங்கும் விக்ரவாண்டி- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைவுபடுத்தி முடிக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடலூர் மாவட்டத்தில் வியாழனன்று 5 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. விக்கிரவாண்டி முதல் தஞ்சாவூர் வரை 165 கி.மீ நீளமுள்ள இச்சாலையை 2006ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலையாக என்.எச்.45சி என அறிவிக்கப்பட்டு 2010 ஆண்டில் திட்டம் தயார் செய்யப்பட்டது. 2017 ஆம் ஆண்டு ரூ.3517 கோடி நிதி ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளித்து 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் பணிகள் துவங்கப்பட்டது. 2020 க்குள் பணிகளை முடித்து 2021ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று அறிவிப்பு வெளியானது. ஆனால் இன்னும் பணிகள் முடி வடையவில்லை. இத னால் விபத்து ஏற்பட்டு சாலையோர பள்ளங்களில் விழுந்து பலர் இறக்க வேண்டியுள்ளது.
நெய்வேலி
எனவே பணிகளை விரைவுபடுத்தக்கோரி சிபிஎம் இந்த போராட்டத்தை நடத்தியது. நெய்வேலியில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு கட்சியின் பகுதிச்செயலாளர் ஆர்.பால முருகன் தலைமை தாங்கி னார். மாவட்டச் செய லாளர் கோ.மாதவன், மாநிலக்குழு உறுப்பினர் டி. ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.திருஅரசு, சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் ஏ.வேல்முருகன், மாவட்டப் பொருளாளர் ஜி. குப்புசாமி, மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் வி. மேரி வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் ஆர்.கலைச்செல்வன்,என்எல்சி-சிஐடியு சங்க பொதுச் செயலாளர் டி.ஜெயராமன், மாதர் சங்க நகர செய லாளர் மாதவி, ஒப்பந்த தொழி லாளர் சங்க பொதுச் செயலாளர் டி. அமிர்த லிங்கம், வாலிபர் சங்க நகர பொறுப்பாளர்கள் ஏ.மாரி தாஸ் ஆகியோர் பேசினர்.
பண்ருட்டி
பண்ருட்டி நான்குமுனை சந்திப்பில் நடைபெற்ற சாலை மறியல் போராட்ட த்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி. உதயகுமார், வட்ட செயலாளர் எஸ்.கே.ஏழுமலை, இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் டி.கிருஷ்ணன், சிபிஎம் நகர செயலாளர் உத்திராபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சோழத்தரம் பேருந்து நிலையம் அருகே நடை பெற்ற சாலை மறியல் போராட்டத்தில் ஒன்றிய செயலாளர் பி. தேன்மொழி தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாவட்ட குழு உறுப்பினர் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சேத்தியாதோப்பு
சேத்தியாதோப்பு நான்குமுனை சந்திப்பில் நடைபெற்ற சாலை மறி யல் போராட்டத்தில் ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் தலைமை தாங்கி னார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர் .ராமச்சந்திரன், ஜே.ராஜேஷ் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வடலூர்
வடலூர் பேருந்து நிலை யம் அருகே நடைபெற்ற சாலை மறியல் போராட்ட த்தில் ஒன்றிய செயலாளர் எம். தண்டபாணி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஆர்.ரவிச்சந்திரன், அசோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.