districts

img

சில்வர் கடற்கரையில் மண் அரிப்பு

கடலூர், ஜன. 6- கடலூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர், நவம்பரில் மிக கனமழை பெய்தது. மாண்டஸ் புயல் காரணமான மிக பலத்த மழை பெய்தது. இந்நிலையில், வழக்கத்தை விட கடல் அலை சீற்றம் அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் மண் அரிப்பு ஏற்பட்டது. இதனால் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.