districts

img

நடத்துநர் இல்லாமல் பேருந்துகளை இயக்குவதா? சிஐடியு கடும் எதிர்ப்பு

கடலூர், மார்ச் 2- கடலூர் - சென்னை வழித்தடத்தில் சொகுசு பேருந்துகளில் நடத்துநர் இல்லாமல் இயக்குவதை கண்டித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் போக்குவரத்து பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கடலூர்-சென்னை வழித்தடத்தில் செல்லும் அல்ட்ரா டீலக்ஸ் சொகுசு பேருந்துகளில் மார்ச் 1ஆம் தேதி முதல் நடத்துநர் இல்லாமல் இயக்கப்படுவதைக் கண்டித்தும், பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வலியுறுத்தியும் போக்குவரத்து துறையிலுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முந்தைய அதிமுக ஆட்சியின்போது நடத்துநர்கள் இல்லாமல் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டது. இதற்கு தொமுச, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு கடும் கண்டம் தெரிவித்து போராட்டம் நடத்தியது. அதன்பிறகு, அந்த திட்டம் கைவிடப்பட்டது. நடத்துனரோடு பேருந்துகள் இயக்கப்பட்டது.  ஆட்சி மாற்றத்திற்கு பின்னர், அதிமுக அரசின் பாதையை அதிகாரிகள் கடைபிடித்து வருகிறார்கள். இந்த பிரச்சனையில் அரசும், போக்குவரத்து துறையும் உடனடியாக தலையீட்டு நடத்துனரோடு பேருந்துகள் இயக்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு பணி மனை தலைவர் ஜி.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சம்மேளன சிறப்பு தலைவர் ஜி.பாஸ்கரன், பணிமனை நிர்வாகிகள் ராஜ், முனுசாமி ஆகியோர் பேசினர்.