districts

img

20 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சாலை

கடலூர்,ஜூன்.8- கடலூர் மாவட்டம் வானமா தேவியி லிருந்து பரிசமங்கலம் செல்லும் சாலையை சீரமைக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வானமாதேவி பேருந்து நிறுத்தத்திலி ருந்து பரிச மங்கலம் செல்லும் சாலை கடந்த 20 ஆண்டுகளாக பராமரிக்கப்படவில்லை. இதனால் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் மழைக்காலங்களில் சேரும் சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. எனவே, இந்த சாலையை உடனடியாக சீரமைத்து கொடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வானமாதேவி பேருந்து நிறுத்தம் அருகே ஏ.தணிகாசலம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஜி.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜே.ராஜேஷ்கண்ணன், ஒன்றியச் செயலாளர் ஆர்.பஞ்சாட்சரம், விவசாய சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் எஸ்.தட்சிணாமூர்த்தி, கடலூர் ஒன்றியக் குழு உறுப்பினர் வைத்திலிங்கம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில் எம்.சந்திரன், ஏ.பிச்சைக்காரன் எல்.பாக்கியராஜ், என்.விஜி, கே.சுதாகர், எஸ்.சுரேஷ், சங்கர் குரு, சீசுபிள்ளை, புண்ணியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;