districts

img

பாக்கிப் பணத்தை வழங்காத சர்க்கரை ஆலைகள்

 கடலூர்,டிச.21- அம்பிகா, திருஆரூரான் சர்க்கரை  ஆலைகள் தர வேண்டிய கரும்புக் கான பாக்கி தொகையை  பெற்றுத் தரக் கோரி கடலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு கரும்புகளுடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 கடலூர் மாவட்டத்திலுள்ள பெண்ணாடம் அம்பிகா, திருஆரூரான்  சர்க்கரை ஆலைகள் விவசாயி களுக்கு தர வேண்டிய கரும்புக்கான பண பாக்கி முழுமையாக பெற்று தர வேண்டும், நெல்லிக்குப்பம் இஐடி சர்க்கரை ஆலை, சேத்தியாத்தோப்பு எம்ஆர்கே கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் கரும்பு விவசாயிகள் பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் தலையிட வேண்டும்.

 கடலூர் மாவட்டத்தில் வேர் அழுகல் நோயால் பாதிக்கப்பட்ட கரும்புக்கு நிவாரணம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவ சாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் சார்பில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு வியாழனன்று (டிச.21) கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

மாநில துணை செயலாளர் ஜி.ஆர். ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில் இஐடி பாரி ஆலை தலைவர் ஆர்.லோகநாதன், செயலாளர் ஆர்.தென்னரசு, எம்ஆர்கே கூட்டுறவு ஆலை இயக்குநர் கே.ஆதிமூலம், தலைவர் அண்ணாதுரை, செயலாளர் என்.ரங்கசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன், மாநிலத் தலைவர் எஸ்.வேல் மாறன் ஆகி யோர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

இந்த போராட்டத்தில் தமிழ்நாடு  விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.கே. சரவணன், பொருளாளர் ஆர்.ராமச்சந்தி ரன், துணைத்தலைவர் எஸ். தட்சி ணாமூர்த்தி, இணை செயலாளர் டி. கற்பனை செல்வம், ஆரூரான் ஆலை  சிறப்பு தலைவர் தனவேல், மாவட்ட துணை தலைவர் ஆர். மகாலிங்கம், குமரகுருபரன், செல்வகுமார் உள்ளி ட்டோர் கலந்து கொண்டனர்.

வருவாய் பங்கீட்டு முறை சட்ட த்தை ரத்து செய்து கரும்புக்கான  பரிந் துரை விலை எஸ்ஏபி அறிவித்த ஒரு டன் கரும்புக்கு ரூ.4000 வழங்க வேண்டும் என்றும் ஒன்றிய மோடி  அரசு சுவாமிநாதன் குழு பரிந்துரை யின் படி விலை பொருட்களுக்கு உற்பத்தி செலவில் 50 விழுக்காடு சேர்த்து விலை வழங்க வேண்டும் என்றும் தலைவர்கள் வலியுறுத்தினர்.