districts

img

வீடு கட்டிக் கொடுக்க வேண்டும்

கடலூர்,ஜன.11- கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம் முதனை கிராமத்தில் வசித்து  வரும் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்  பார்வதி ராஜாக்கண்ணு. இவர் கடலூர்  ஆட்சியர் அருண் தம்புராஜை சந்தித்து  கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- எனது கணவர் ராஜாக்கண் ணுவை 1993 ஆம் ஆண்டு கம்மாபுரம்  காவலர்கள் விசாரணை என்ற பெயரில்  அழைத்து சென்றனர். பிறகு, அடித்து கொலை செய்தனர். அவருடைய உடலை யார் கண்ணிலும் கூட காட்ட வில்லை.

அதன் பிறகு, மக்கள் மன்றத்தி லும், நீதிமன்றத்தில் தொடர்ந்து போராடி 2004- இல் தவறு இழைந்த 5 காவலர்கள் நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறைக்கு அனுப்பியது. இந்த சம்பவம் நடந்து 30 ஆண்டுகளாகிறது. இந்த நிலையில், எனது குடும்பம் பாதித்த கதையை  ‘ஜெய்பீம்’ திரைப்பட மாக வெளிவந்தது. அப்போது தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எங்களுக்கு வீடு கட்டி கொடுக்க உத்தரவு பிறப்பித்தார்.

ஆனால், இது வரைக்கும் அதிகாரிகள் வீடு கட்டி  கொடுக்கவில்லை.  தற்போதும் நான் வசிக்க சொந்த மாக வீடு இல்லாமல்  அக்கம் பக்கம்  வீடுகளில் ஒதுங்கி இருக்கிறேன்.  எனவே, எனக்கு பழங்குடியின மக்கள் வீடு கட்டும் திட்டத்தில் ஒரு வீடு  கட்டி கொடுத்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித் துள்ளார்.

ஆட்சியரிடம் மனு அளிக்கும் போது  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் கோ.மாத வன், விருத்தாச்சலம் வட்டக் குழு உறுப்பினர் முதனை கோவிந்தன்   உள்ளிட்டோர் உடனிருந்தனர்.