districts

img

அக்னிபாதை திட்டத்தை எதிர்த்து கடலூரில் போராட்டம்: உ.வாசுகி பங்கேற்பு

கடலூர், ஜூன் 25- இந்திய ராணுவத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை சேர்க்கும் அக்னி பாதை திட்டத்தை கைவிட வேண்டும். மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவோர் மீது வெறுப்புணர்வை பரப்புவதை கைவிட வலியுறுத்தியும் உத்தரப்பிரதேசத்தில் போராட்டம் நடத்தியவர்களின் வீடுகளை இடித்ததற்கு கண்டனம் தெரிவித்தும் கடலூர் முது நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஆர்.பஞ்சாட்சரம் தலைமை வகித்தார். மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி கண்டன உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் கோ.மாதவன்,  செயற்குழு உறுப்பினர்கள் பி.கருப்பையன், வி.சுப்பு ராயன், மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத், நிர்வாகிகள் எஸ்.தட்சணாமூர்த்தி, ஆர்.ஆளவந்தார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.