கிருஷ்ணகிரி,ஜூலை20- கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், பிஎம்சி டெக் கல்லூரி ஆகிய இணைந்து ஓசூரில் நடத்தி வரும் 11 ஆவது புத்தக திருவிழாவின் 11 ஆம் நாள் நிகழ்ச்சியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி கலந்து கொண்டு “சீறுவோர் சீறு”எனும் தலைப்பில் சிறப்புரை யாற்றினார். அதனைத் தொடர்ந்து கவிஞர் ஓசூர் சி.பி.ஜெயராமனின் “குரங்கின் வாழ் பிரிய” கவிதை நூலை உ.வாசுகி வெளியிட தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லி பாபு நூலை பெற்றுக் கொண்டார். புத்தகத் திருவிழா இணைச் செயலாளர் பால கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இந்தியன் வங்கி ஊழியர் சங்க நிர்வாகி சிவப்பிரகாஷ் வரவேற்றார். மாதர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி முன்னிலை வகித்தார். புத்தகத் திருவிழா துணைத் தலைவர் முத்து, இளநிலை பொறியாளர் துரை, சிறப்பு நிலை முகவர் கருணாநிதி, உட்பட கலந்து கொண்டனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கிளைச் செய லாளர் அரிச்சந்திரன், ஒருங்கிணைப்பாளர் சிவகுமார், மாநிலச் செயலாளர் சேதுராமன், புத்தகத் திருவிழா மதிப்புறு தலைவர் வணங்காமுடி, பொருளாளர் கண்மணி, துணைத் தலைவர் சத்திய மூர்த்தி கலந்து கொண்டனர். மாணிக்கவாசகர் குடியிருப் போர் சங்கத் தலைவர் ஜோதி யப்பா நன்றி கூறினார்.