கடலூர், அக.18- தமிழக முதல்வரின் சிறப்பு திட்டமான மக்களை தேடி மருத்துவப் பணியில் தமிழகம் முழுவதும் 11 ஆயிரம் ஊழி யர்கள் பணி அமர்த்தப்பட்டு வேலை செய்து வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் 360 ஊழியர்கள் இந்த பணி யில் ஈடுபட்டுள்ளனர். பணியில் சேர்ந்த நாள் முதல் அனைத்து கிராமத்திற்கும் தனியாக சென்று மக்களுக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் தொற்றா நோய்களை கண்ட றிந்து அவர்கள் இல்லத்திற்கு நேரில் சென்று மருந்து மாத்திரைகளை தங்கு தடை யின்றி வழங்கி வருவதோடு முழு நேர மும் இந்த பணியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஊக்கத் தொகை என்ற பெயரில் மாதம் ரூ.4500 மட்டுமே வழங்கப்படுகிறது. தீபாவளிக்கு போனஸ் வழங்க வேண்டும், திறன் வளர்ப்பு பயிற்சி கொடுத்து சான்றிதழ் வழங்க வேண்டும், ஊழி யர்களை கண்ணியமாக நடத்த வேண்டும், விலைவாசிக்கு ஏற்ப மாத ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், மாதாமாதம் ஊதியத்தை 6ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும். மருத்துருவ உபகரணங்களுக்கு பேட்டரி போடவும், பராமரிக்கவும் மாதாந்திர பராமரிப்பு படி வழங்க வேண்டும், தற்போது அறிவித்துள்ள ரூ.2000 ஊக்கத் தொகையை அனைத்து ஊழியர் களுக்கும் வழங்க வேண்டும், போக்கு வரத்து படி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.சரிதா, துணைத்தலைவர் தமிழ் இன்பம், ஆனந்தி, சிஐடியு மாவட்டத் தலைவர் பி. கருப்பையன், மாநிலக் குழு உறுப்பினர் வி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சுகாதாரப் பணிகள் இணை இயக்குநரை சந்தித்து மனு அளித்தனர்.