districts

img

புத்தாண்டு: பிச்சாவரத்தில் குவிந்த மக்கள்

சிதம்பரம், ஜன. 1- சிதம்பரம் அருகே கிள்ளை பேரூராட்சி யில் உள்ள பிச்சாவரம் சுற்றுலா மையம் கடற்கரை முகத்துவாரம் பகுதி யாக உள்ள உப்பனாற்றில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், 3,500 கால்வாய்களுடன் சுரபுண்ணை மரங்கள் கொண்ட மாங்குரோவ் காடுகள் (சதுப்பு நிலக்காடுகள்) அமைந்துள்ளன. சுரபுன்னை மரங்கள் மருத்துவ குணம் கொண்டது. .இந்த மரங்கள் 70 விழுக்காடு உப்பு நீரிலும், 30 விழுக்காடு நன்னீரிலும் வளரக் கூடியது. இதுநாட்டின் இரண்டாவது சதுப்புநிலக்கடுகள் ஆகும். இதனை வனத்துறையினர் பாதுகாக்கப்பட்ட இடமாக பராமரித்து வருகின்றனர்.. இந்த மாங்குரோவ் காடுகளை படகுகளில் சென்று பார்வையிடுவது கண்கொள்ளா காட்சியாகவே இருக்கும். இதை கண்டு மகிழ்வதற்காக உள்ளூர் மட்டுமின்றி, வெளிநாடு, வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பள்ளி விடுமுறை, புத்தாண்டு என தொடர் விடுமுறை அளிக்கப்பட்டதால் அதிகளவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.