districts

img

தலித் மக்கள் மீது கொலை வெறி தாக்குதல்: கண்டு்கொள்ளாத காவல்துறைக்கு கண்டனம்

சிதம்பரம், அக். 10 - சிதம்பரம் அருகே எண்ணநகரம் கிராமத் தில் வசிக்கும் பொது மக்கள் அந்த வழியாக  இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை மெதுவாகச் செல்லுமாறு அறிவுறுத்தி யுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த மாற்று  சமூக இளைஞர்கள் சுமார் 40க்கும் மேற்பட்டோர் கடந்த செப்டம்பர் 27ஆம்  தேதி எண்ணநகரம் கிராமத்தில் தலித்  மக்கள் வசிக்கும் பகுதியில் கத்தி, கடப்பாரை  உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகுந்து தலித் மக்களின் வீடு மற்றும் உடைமைகளை அடித்து நொறுக்கினர். அப்போது, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கீரப்பாளையம் ஒன்றியச் செயலாளர் கவியரசன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர் மச்சகேந்திரன் உள்ளிட்டோரை கொலை வெறியுடன் கத்தியால் வெட்டியுள்ளனர். இது குறித்து சிதம்பரம் தாலுகா காவல் நிலையத் தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு 2 வாரத் திற்கு மேலாகியும் சம்பந்தப்பட்ட குற்றவாளி களை கைது செய்யாப்படவில்லை. இந்நிலையில் குற்றவாளிகளை கைது செய்யாமல் காலம் கடத்தும் காவல் துறையினரைக் கண்டித்து சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் கீரப்பாளையம் ஒன்றியச் செயலாளர் செல்லையா தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலா ளர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் வாஞ்சிநாதன், ஜெயசித்ரா, நகரச் செயலாளர் ராஜா, மாதர் சங்க மாவட்டத் தலைவர் மல்லிகா, வாலிபர் சங்க  மாநிலத் துணைச் செயலாளர் ஸ்டாலின், மாவட்டத் தலைவர் சின்னத்தம்பி, செய லாளர் வினோத்குமார், பொருளாளர் சதீஷ் குமார், சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சிவராமன், நெடுஞ்சேரலாதன் ஆகியோர் பேசினர். இதில் அந்த கிராமத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர். பின்னர் இதுகுறித்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.