கடலூர், நவ. 28- திட்டக்குடி அருகே ஆற்றுப்படு கையில் 100 ஆண்டுகளாக விவசாயி கள் அனுபவித்து வரும் நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்டட் செயலாளர் கோ.மாதவன், விருத்தா சலம் வட்ட செயலாளர் என்.எஸ்.அசோகன், தலைமையில் விவ சாயிகள் கடலூர் மாவட்ட ஆட்சி யரிடம் அளித்துள்ள மனு அளித்த னர். அந்த மனுவில் கூறியிருப்ப தாவது: திட்டக்குடி வட்டம் என்பது வெண்கரும்பூரில் 210 ஏக்கர் வெள்ளாற்றுப் படுகையில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் 1917ஆம் ஆண்டு முதல் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக நான்கைந்து தலைமுறைகளாக புதர்மண்டி கிடந்த செடிகொடிகளை அகற்றி மேடு பள்ளமாக இருந்த நிலத்தை உழுது பண்படுத்தி உளுந்து, மணிலா, எள், கம்பு, நெல், கத்திரி, மிளகாய், கரும்பு, மரவள்ளி போன்ற பயிர்கள் மற்றும் தோட்டப்பயிர்களை சாகு பாடி செய்து வருகின்றனர். அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டுதான், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட வாழ்க்கையின் அடிப்படைத் தேவையை பூர்த்திச் செய்து வருகின்றனர். இந்நிலையில் 1953ஆம் ஆண்டு முதல் 1967ஆம் ஆண்டு வரை தமிழக முதலமைச்சராக இருந்த காம ராஜர் ஆட்சியின் போது வனத்துறை யினர் மேற்கண்ட நிலத்தில் மரக்கன்று கள் நட திட்டமிட்டதை விவசாயிகள் அறிந்து அப்போதைய மாவட்ட அமைச்சர் பூவராகவன் மூலம் மேற்குறிப்பிட்ட 210 ஏக்கர் ஆற்றுப்படுகை நிலத்தை விவசாய நிலமாக பண்படுத்தி கடந்த 40 ஆண்டு களாக பயிர் செய்து ஆண்டு அனுப வித்து வருவதையும் அதன் மூலம் கிடைக்கும் வருவாய் மட்டுமே வாழ்வாதாரம் என்பதை அப்போதைய தமிழக முதல்வர் காமராஜர் கவனத்திற்கு கொண்டு சென்றதன் விளைவாக மேற்படி நடவடிக்கையை வனத்துறையினர் கைவிட்டனர். விவசாயிகளுக்கு 1981ஆம் ஆண்டு வனத்துறை மூலம் விவசாய நிலத்தை விட்டு வெளியேற நோட்டீஸ் அனுப்பப்பட்டதை எதிர்த்து 1982ஆம் ஆண்டு நீதிமன்ற வழக்கு தொடர்ந்ததில் 1986ஆம் ஆண்டு விவசாயிகள் அனுபவ ஆவணங்கள் (ம) நிலத்தின் தன்மை, வகைப்பாடு ஆகியவற்றை சுட்டிக்காட்டி மாவட்ட நீதிமன்றம் மேற்கண்ட விவசாயிகளுக்கு அனு பவத்தின் அடிப்படையிலான நில அளவு விவசாய நில பட்டா வழங்க வேண்டும் என செட்டில் மெண்ட் வட்டாட்சியருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் இன்றுவரை வனத்துறை எவ்வித நட வடிக்கையும் மேற்கொள்ளாத நிலை உள்ளது. இந்நிலையில் வனத்துறை எந்த முன்னறிவிப்பும் இன்றி அந்த நிலங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருவதோடு காலங்கால மாக விவசாய நிலங்களுக்கும், சுடு காட்டிற்கு செல்லும் பாதையைக் கூட மறித்து அங்கே ஆடு, மாடு கள் வரக்கூடாது என்றும், மீறி னால் வழக்கு போட்டு சிறை யில் அடைப்போம் என்றும் அச்சுறுத்துகின்றனர். வனத்துறை யினர் விவசாயிகளின் அனுமதி யின்றி அத்துமீறி இதுபோன்ற நட வடிக்கையில் முற்றிலுமாக ஈடுபடாமல் இருக்க தடை ஆணை பிறப்பிக்க வேண்டும் எனவும், அவர்களுக்கு விவசாய நில பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.