districts

img

சாகுபடி நிலத்தில் மரக்கன்றுகளை நடும் வனத்துறை ஆற்றுப் படுகை விவசாயிகள் ஆவேசம்

கடலூர்,டிச.28- விருத்தாலசம் அருகே விவ சாய நிலத்தில் மரக்கன்றுகளை நட்டு அட்டூழியம் செய்து வரும் வனத்துறையை கண்டித்து ஆற்றுப்படுகை விவசாயிகள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆற்றுப் படுகை விவசாயிகளை மிரட்டுவதை கண்டித்தும், கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வன கோட்டத்திற்குட்பட்ட முருகன்குடி, மோசட்டை, வெண்கறும்பூர், நந்தபாடி, சத்தியவாரி ஆகிய கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் ஆற்றுப்படுகையில் 100 ஆண்டுகளுக்கு மேலாக பயிர் செய்து வருகின்றனர். இந்த விவசாய நிலத்தில் சாகு படி பயிர்களை அழிக்கும் வகை யில் வனத்துறையினர் மரக்கன்று நடுவதை தடுத்து நிறுத்த கோரி யும், இந்த பிரச்சனையில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு விவசாயி களை பாதுகாக்க வலியுறுத்தியும் புதனன்று(டிச.28) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆற்றுப்படுகை விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கி னார். மார்க்சிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.கருப்பையன், என்.எஸ். அசோகன், திட்டக்குடி வட்டச் செய லாளர் அன்பழகன், விவ சாய சங்க வட்டச் செயலாளர் பி.அரவிந்தன், ஆற்றுப்படுகை விவசாய சங்கத் தலைவர் அழகு. மாசிலாமணி, ஆர். மகாலிங்கம், தெய்வபத்தி, வாலிபர் சங்க செயலாளர் கலைச் செல்வன் உள்ளிட்டோர் கலந்து கோரிக்கை களை வலியுறுத்தி பேசினர்.